ஆசையிலேபாத்திகட்டி-Aasiyile Pathi Katti, ,Ramarajan ,Gauthami Love Melody Super Hit Song
30,217,523
Published 2016-02-29
All Comments (21)
-
இந்த பாடலை இதுவரை 100 முறை கேட்டிருப்பேன். ஆனாலும் சளைக்கவில்லை ராஜா ராஜாதான் #இளையராஜா 🥰
-
தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு பாட்டோடு வாழும் என் சாமியே உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு கேட்டாக்கா வாழும் உன் பூமியே என் மூச்சு என் பேச்சு நீதானயா என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா. ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி நானா பாடலயே நீதான் பாட வச்ச நானா பாடலயே நீதான் பாட வச்ச ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி வைகையிலே வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு கன்னி என்னைத் தேடி நீ அங்க வந்து சேரு விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு நீ வாயேன் வழி பாத்து ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி கண்ணுதான் தூங்கவில்ல காரணம் தோணவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி நானா பாடலயே நீதான் பாட வச்ச நானா பாடலயே நீதான் பாட வச்ச ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி 🙏🙏🙏🙏🙏🙏 பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏💖💖💖
-
கிராமத்து ரசனை உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்ற இளையராஜாவின் பாடல்களை ரசிக்க முடியும்.
-
திருவள்ளுவர் வழி வந்த வள்ளுவர் குல மக்களின் பெருமையை சொல்லும் அற்புதமான வசனம் வாழ்த்துக்கள்
-
இந்தப் பாடலைக் கேட்கும்போது நான் கிராமத்துக்கு சென்ற மாதிரி இருக்கிறது. இந்தப் பாடல் மண் மனம் மாறாத பாடல். வாழ்க இசைஞானி இளையராஜா, வளர்க அவருடைய புகழ்!!!!!!
-
நான் வயலில் நாற்றை பரப்பியது ஞாபகம் வருகிறது சிறிய கண்ணீருடன்
-
இந்த மாதிரி பாட்டு கேட்கும் போதெல்லாம், திருப்பவும் இந்த மாதிரி வாழ்க்கை முறை கிடைக்காத ஏன்ற ஏக்கம்... 😍🥰
-
கிராமத்து வாசனை என்பதை மக்களுக்கு உணர்த்திய பெருமை இளையராஜாவையே சேரும்.
-
வாழ்நாள் முழுவதும் கேட்டாலும் சலிக்காது இசைஞானியின் இசை வெள்ளம்🙂🙂
-
இளையராஜா இல்லையென்றால் பலரின் வாழ்க்கை தனிமையில் வெருமை கண்டிருக்கும்
-
இந்த பாடலில் முதலில் நாற்று நடும் வயல்கள் மதுரை -மேலக்கால் ரோட்டில் இருக்கு ஆனால் தற்போது இந்த இடம் எல்லாம் வீடுகளாகவும் பிளாட்டாகவும் மாறிடுச்சு, பின்னால் தெரியும் நாகமலை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கு, இந்தப் பாடலைப் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.
-
மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்! இளைய ராஜா இல்லை என்றால் நம்மில் பல பேர் பைதியம் ஆக திருஞ்சி இருப்போம்
-
இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் சுகமான ராகம் இசைஅரசி பி. சுசீலா அம்மா குரலில் மயங்கியது இதயமும் இயற்கையும்
-
Tension குறைக்கற வலிமை இளையராஜாவின் இசைக்கு மட்டுமே உள்ளது.
-
2021லே அந்த மகிழ்ச்சியான காலத்தை கடந்து விட்டேனே என வேதனையோடு இந்த பாடலை பலமுறை கேட்டேன் உங்களுக்கு அந்த அனுபம் உண்டா???
-
இளையராஜாவின் இசைத் தேனில் சுசீலா அம்மாவின் குரல் என்னும் பலாச்சுளையை கலந்து உண்ட சுவையாக உள்ளது..
-
என்ன ஒரு இனிமை .....அப்பா..... ஆயிரம் பாடல்கள் வேறு இசையில் கேட்டாலும், ராசா அவர்கள் இசை தான் உச்சம்
-
இசையில் "இசைராஜா ". இசைஞானியின் இசை உயிர் மூச்சென ரசிக்கும் கூட்டங்கள் ஏகோபித்த அளவில் பல மடங்காய் பெருக,துணை நிற்கும் "இசைக்குயில்" சுசீலா வின் ஏற்ற இறக்கக் குரலும்,உச்சக் கட்ட கூவும் இனிமைக் குரலும் போட்டிப் போட்டு ராஜாவின் இசைக்கு மகுடம் ஏற்றுகிறது
-
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵🎶
-
யாறு தூங்கும் பொது இந்த பாடல் கேட்டு துங்குவிங்க மென்மையன இசை 2020 அக்டோபர் ல 🤙